search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஷ்ட்ரிய ஜனதா தளம்"

    • ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்களின் இதுபோன்ற மோசமான கருத்துக்கள் வீண் விளம்பரத்திற்காக தெரிவிக்கப்படுகின்றன.
    • மனோஜ் குமார் ஜா மற்றும் ஜனதா தளம் கட்சி தலைவர் சஞ்சய் ஜா பிராமின்களின் பூர்விகம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்.

    பீகார் மாநிலத்தின் சுபவுல் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

    சொந்த கட்சியினரிடையே பேசும் போது, டிஎன்ஏ டெஸ்ட்-இல் பிராமின்களின் பூர்விகம் ரஷ்யா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் என்றும் இந்தியா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இத்துடன் பிராமின்கள் நம்மிடையே பிரிவினை ஏற்படுத்தி நம்மை ஆள முயற்சி செய்கின்றனர் என்று அவர் தெரிவித்தார். மக்கள் பிராமின்களை அவர்கள் இருக்க வேண்டிய இடத்திற்கே அனுப்ப வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

     

    "டிஎன்ஏ பரிசோதனையில் பிராமின்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது. அவர்கள் ரஷ்ய பூர்விகம் கொண்டவர்கள் ஆவர். தற்போது அவர்கள் இங்கு செட்டில் ஆகிவிட்டனர். பிராமின்கள் நம்மை பிரித்து ஆட்சி செய்ய முயற்சித்து வருகின்றனர். நாம் அவர்களை இங்கிருந்து துரத்த வேண்டும்," என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் தெரிவித்தார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    "ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரின் கருத்துக்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது. பரசுராம் ரஷ்யா அல்லது வேறு ஏதேனும் நாட்டில் இருந்து வந்துள்ளாரா? ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்களின் இதுபோன்ற மோசமான கருத்துக்கள் வீண் விளம்பரத்திற்காக தெரிவிக்கப்படுகின்றன. இதுபோன்ற கருத்துக்களுக்கு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற கருத்துக்கள் மஹாகத்பந்தன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகிறது," என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணியில் இருக்கும் ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் குமார் ஜா தெரிவித்துள்ளார்.

    "ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவரின் மனநிலை சீராக இல்லை என்றே நான் நினைக்கிறேன். இதே கட்சியை சேர்ந்த மனோஜ் குமார் ஜா மற்றும் ஜனதா தளம் கட்சி தலைவர் சஞ்சய் ஜா பிராமின்களின் பூர்விகம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்," என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்து இருக்கிறார்.

    கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்பதால் பாஜக ஆட்சியமைக்க கவர்னர் அழைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், பீகாரில் நாங்கள் தனிக்கட்சி நாங்கள் என்பதால் ஏன் ஆட்சியமைக்க கூடாது? என தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். #BJP #RJD
    பாட்னா:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் வென்றன.

    பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், தனிப்பெரும் கட்சி நாங்களே எனவே எங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என எடியூரப்பா அம்மாநில கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்தார்.

    குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்தனர். திடீர் திருப்பமாக நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

    பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களை வைத்துள்ள கட்சி ஆட்சியமைக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பீகாரில் நாங்களே தனிப்பெரும் கட்சி ஏன் நாங்கள் ஆட்சியமைக்க கூடாது? என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர், முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    நாளை மதியம் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாகவும் தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2015-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 71 தொகுதிகளிலும், பாஜக 53 இடங்களிலும் வென்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது போலவே, கூட்டணி ஆட்சி அமைத்தது.

    பின்னர், 2017-ம் ஆண்டு திடீரென ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், கூட்டணியிலிருந்து விலகி பின்னர் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×